Friday, February 29, 2008

கடவுள்







உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பே ஆலையம்
வள்ளல் பிரானுக்கு
வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு
சீவன் சிவலிங்கம்

திருமூலர் சொன்னது

உயிர் தான் கடவுள்
இந்த ஜீவன்களுக்குள்ளும்
கடவுள் இன்னும் இறக்கவில்லை

கடவுள் இங்கே
இதை விடுத்து
எங்கே தேடுகின்றாய் மானுடனே?

கண்ணுக்கு முன்னால்
கடவுள்
காணிக்கையை அவரிடம்
நேரடியாய் கொடுத்துவிடு


ஆலயங்கள் இடிகின்றது
சீவன் சாகிறது
கடவுளிடம் இருந்து
விலகாதே மானுடனே

கருங்கல்லை கடவுள் என்று
வைக்கலில் ஊறிய பசும்பாலை
கல்லின் மேல் உற்றி
கருணையற்றவன் ஆகாதே
உயிருள்ள கடவுளின்
வாய்கள் வறண்டு கிடக்கின்றது.

மலைபோல் தேங்காய்களை
சபரிமலையில்
விரையமாக்கதே
கடவுளிடம் நேரடியாய் கொடுத்துவிடு

பட்டுப்பூச்சிகளை கொன்று
பட்டு நெய்து
பட்டாபிசேகம் என்னும்
பாபத்தை செய்யாதே
அந்த பணத்தை
பசியோடு இருக்கும் கடவுளுக்கு
பாசமாய் கொடுத்து விடு
நேசமாய் கடவுளுடன்
கூடியிரு

உனக்குள் இருக்கும்
உயிர்தான் கடவுள் என்று
உணர்ந்து விடு
கடவுள்களுடன்
கைகோர்த்துவிடு

கடவுள் என்று சொன்னார்
கடந்து உன்னுள் சென்றுவிடு.


-சின்னா

1 comment:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//கண்ணுக்கு முன்னால்
கடவுள்
காணிக்கையை அவரிடம்
நேரடியாய் கொடுத்துவிடு//

//கருங்கல்லை கடவுள் என்று
வைக்கலில் ஊறிய பசும்பாலை
கல்லின் மேல் உற்றி
கருணையற்றவன் ஆகாதே
உயிருள்ள கடவுளின்
வாய்கள் வறண்டு கிடக்கின்றது.//

பொட்டில் அறையும் வீச்சு வரிகள்! இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் கடவுள் மட்டுமல்ல, கடவுளோடு சேர்ந்து மனிதமும் உயிர் வாழும்! சரிதானே?

இப்போது தான் உங்கள் பிளாக் எனக்கு தெரிய வந்தது. இனி படித்து படித்து பின்னுட்டம் இடுகிறேன், பொறுமையாக!

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...