Tuesday, November 27, 2007

ஈழத்தமிழன்

சிதைவுகளின்
செதிலங்களில்
உயிர்வாழும்
ஒரு இனம்
ஈழத் தமிழினம்

சிதைவுகளில் நின்று
செதிலங்களை கொண்டு
அழகான கோபுரம் ஒன்று
செய்யும் சிற்பிகளின்
உளிகளில்
இரத்தம் கசிகின்றது

வியர்வையும் கண்ணீரும்
வழிந்தோடுகின்றது
கழைத்து கழைத்து
உயிர்கள் பிரிந்து
உடல்கள் சரிந்து வீழ்கின்றது

கவலைகளும் கதறல்களும்
படல்களாக விரிகின்றது
காலத்தின் இலக்கியம்
கண்ணீரில் எழுதப்படுகின்றது

எங்கள் காலத்தை
இலக்கியக் கண்ணாடியில்
தெளிவாகப் பார்க்க முடியாது
எங்கெல்லாம் குழந்தைகள்
உயிர்வதையில் கத்துகின்றார்களோ
அங்கெல்லாம் பார்க்க முடியும்
எங்கெல்லாம் மனிதனை மனிதன் பிணமாக்கிறானோ
அங்கெல்லாம் பார்க்க முடியும்

எமது குருதியை தெளித்து
சதைகளால் புள்ளிவைத்து
போடப்பட்ட உயிர்க்கோலங்கள்
எங்களை எப்போதும் வரவேற்றுக்கொண்டிருக்கும்

இடுகாடுகள் மீது பயம் நிச்சயமாக இல்லை
பாசம் நிரம்ப இருக்கின்றது
அங்கேதான் எமது உறவும் உணர்வும்
இன்னும் புதைந்து கிடக்கின்றது
எமது வாழ்வும் இனி
அங்கிருந்துதான் ஆரம்பிக்கும்.

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...