உயிரும் குருதியும் ஊற்றி
வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில்
வாழ்வே தவறி விழுவதுதான்
எப்போதும் நிகழ்கின்றது.
ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந்து
கரைந்தோடிவரும் சாம்பல்
நிலங்களில் வரையும் ஓவியங்கள்
அறிவுக்கும் அது ஆட்சி செய்யும் உணர்வுக்கும்
அர்த்தம் புலப்படாதவை
உலக ஜனநாயகச் சந்தையில்
மீந்துபோன பொருள்களை
மலிவாகவோ இனாமாகவோ
பெற்றுவிடத் துடிக்கும்
எம் சித்தாந்தவாதிகளாலும்
புத்திசீவிகளாலும் புரிந்துகொள்ள முடியாதவை
மழைக்கு முன் வயல்க் கரைகளில்
தோகைவிரித்தாடும் மயில்கள்
இப்போது என்னும் வண்ணமயமாய்
வயலுக்குத் தூரத்தே வெட்டவெளிகளில்
கந்தசட்டி கவசத்தை இறுவெட்டில் இசைத்து
ஆடிக்கொண்டிருக்கின்றது
சாம்பலை நெற்றியில் பூசி
தாண்டவமாடும் கந்தனின் தந்தை
சூலாயுதத்தை கமக்கட்டுக்குள் வைத்த
தலைகவிழ்ந்து நிற்கின்றார்
பிள்ளைவாழ்கள் சொல்கேட்டு
பிள்ளை விழையாடிய பிள்ளை விழையாட்டு
சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது
பழமொழி சரியென பழையகமங்களுக்கு தெரிந்தபோது
சூனியக்காரனின் மண்டையோட்டுக்குள்
எங்கள் ஆத்மா அடைக்கப்பட்டுவிட்டது
மழை நீரை பிடித்து பனையில் ஏறும்
பனையேறி மீனைப்போல்
ஒரு கணம் கடும் சினத்தைப் பிடித்து
நியாயத்தின் மீதேறி சன்னதமாடத் துடிக்கும்
அடிமையின் கனவு கலைந்து போகும் தருணங்களில்
எங்கள் வாழ்வு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வினைகள் செத்துப்போய்
வெற்றுடலாய் கிடக்கும்போது
வினைக்கு மறுவினை பிறந்தால்
நாம் வாழ்ந்ததாக கடந்துசெல்லும்
ஒவ்வொரு கரிநாளும் எமக்குத் திருநாளே
Saturday, February 18, 2012
Subscribe to:
Comments (Atom)
எம்பெருமான்
உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...
-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலையம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் திருமூலர் சொன்னது உயிர் தான் கட...
-
எஞ்சியது வெறுமை மட்டும் அதை எனது தொடர்புக் கருவியான தமிழில் எழுதுகின்றேன் இந்தக் கருவி மட்டும் கர்வத்துடன் இருக்கின்றது எனது உணர்ச்சிகளுக்க...
-
விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத காரிருள் மின்சாரமில்லாததெருக்களில் ஈசல்கள் ஊர்வலம் முகத்திலடிக்கும் வண்டுகள் கண்ணுக்கள் சென்றுவிட்டால் கண்ணீரு...