அழகான குளத்தில்
அலையில்லாத
நீரின் நெளிவுகள்
ஆற்றின் ஓரத்தில்
வழைந்து படபடக்கும்
நாணல்கள்
காலைகளில்
வயல் வெளிகளில்
பயின் நுனியில்
இருந்து யோசிக்கும்
பனித்துளிகள்
தேனிக்கள் முட்டும்போது
ஆடும் பூக்கள்
தென்னோலைகளில்
ஊஞ்சல் ஆடும்
தூக்கணாங் குருவிக் கூடுகள்
நேராக வர
புடலங்காயில்
தொங்க விட்ட கற்கள்
பச்சைக் கொடியில்
மஞ்சளாய் ஒழிந்து பழுத்த
பாகற் பழங்கள்
வேலிக்குள் நுளையாமல்
கழுத்து மட்டை அடித்த
வெள்ளாடுகள்
தூரத்துப் பனையில்
கள் முட்டியோடு ஏறும்
சீவல் காரன்
முழு நிலவு பின்னிரவில்
பொன்னிறம் மிளிரும்
தரவைக் கடலில்
றால் பிடிக்கும் படகுகள்
வயல் நடுவில்
திடீர் என்று வளர்ந்த
மஞ்சள் குன்று நெற் சூடுகள்
இலைகளுள் மறைந்தாடும்
கிளி கொத்திய மாம்மழத்தின்
மஞ்சள்
இரவுகளில் தொப்பென்று விழும்
பனம் பழத்தின் சத்தங்கள்
கால்வாயில்
மிதந்து வரும்
குறுனிப் பூக்கள்
அலாரத்தின் விழிப்பில்
கலைந்து போன
உலத்தல் கனவு
வேலை நோக்கி
விரைகின்றது கால்கள்
ஒரு கறுத்த முகத்தை
சுற்று முற்றும் பார்த்து
தோற்றபடி
சன்னலுக்கு வெளியே
வேகமாக ஓடுகிறது
விளம்பரப் பலகைகள்
பயணம் தொடர்கிறது...
Sunday, August 3, 2008
Subscribe to:
Comments (Atom)
எம்பெருமான்
உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...
-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலையம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் திருமூலர் சொன்னது உயிர் தான் கட...
-
எஞ்சியது வெறுமை மட்டும் அதை எனது தொடர்புக் கருவியான தமிழில் எழுதுகின்றேன் இந்தக் கருவி மட்டும் கர்வத்துடன் இருக்கின்றது எனது உணர்ச்சிகளுக்க...
-
விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத காரிருள் மின்சாரமில்லாததெருக்களில் ஈசல்கள் ஊர்வலம் முகத்திலடிக்கும் வண்டுகள் கண்ணுக்கள் சென்றுவிட்டால் கண்ணீரு...