Sunday, August 3, 2008

காட்சிப் பிரிவுகளின் கனவுப் பிரிவுகள்

அழகான குளத்தில்
அலையில்லாத
நீரின் நெளிவுகள்

ஆற்றின் ஓரத்தில்
வழைந்து படபடக்கும்
நாணல்கள்

காலைகளில்
வயல் வெளிகளில்
பயின் நுனியில்
இருந்து யோசிக்கும்
பனித்துளிகள்

தேனிக்கள் முட்டும்போது
ஆடும் பூக்கள்

தென்னோலைகளில்
ஊஞ்சல் ஆடும்
தூக்கணாங் குருவிக் கூடுகள்

நேராக வர
புடலங்காயில்
தொங்க விட்ட கற்கள்

பச்சைக் கொடியில்
மஞ்சளாய் ஒழிந்து பழுத்த
பாகற் பழங்கள்

வேலிக்குள் நுளையாமல்
கழுத்து மட்டை அடித்த
வெள்ளாடுகள்

தூரத்துப் பனையில்
கள் முட்டியோடு ஏறும்
சீவல் காரன்

முழு நிலவு பின்னிரவில்
பொன்னிறம் மிளிரும்
தரவைக் கடலில்
றால் பிடிக்கும் படகுகள்

வயல் நடுவில்
திடீர் என்று வளர்ந்த
மஞ்சள் குன்று நெற் சூடுகள்

இலைகளுள் மறைந்தாடும்
கிளி கொத்திய மாம்மழத்தின்
மஞ்சள்

இரவுகளில் தொப்பென்று விழும்
பனம் பழத்தின் சத்தங்கள்

கால்வாயில்
மிதந்து வரும்
குறுனிப் பூக்கள்

அலாரத்தின் விழிப்பில்
கலைந்து போன
உலத்தல் கனவு

வேலை நோக்கி
விரைகின்றது கால்கள்
ஒரு கறுத்த முகத்தை
சுற்று முற்றும் பார்த்து
தோற்றபடி

சன்னலுக்கு வெளியே
வேகமாக ஓடுகிறது
விளம்பரப் பலகைகள்
பயணம் தொடர்கிறது...

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...