உயிரும் குருதியும் ஊற்றி
வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில்
வாழ்வே தவறி விழுவதுதான்
எப்போதும் நிகழ்கின்றது.
ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந்து
கரைந்தோடிவரும் சாம்பல்
நிலங்களில் வரையும் ஓவியங்கள்
அறிவுக்கும் அது ஆட்சி செய்யும் உணர்வுக்கும்
அர்த்தம் புலப்படாதவை
உலக ஜனநாயகச் சந்தையில்
மீந்துபோன பொருள்களை
மலிவாகவோ இனாமாகவோ
பெற்றுவிடத் துடிக்கும்
எம் சித்தாந்தவாதிகளாலும்
புத்திசீவிகளாலும் புரிந்துகொள்ள முடியாதவை
மழைக்கு முன் வயல்க் கரைகளில்
தோகைவிரித்தாடும் மயில்கள்
இப்போது என்னும் வண்ணமயமாய்
வயலுக்குத் தூரத்தே வெட்டவெளிகளில்
கந்தசட்டி கவசத்தை இறுவெட்டில் இசைத்து
ஆடிக்கொண்டிருக்கின்றது
சாம்பலை நெற்றியில் பூசி
தாண்டவமாடும் கந்தனின் தந்தை
சூலாயுதத்தை கமக்கட்டுக்குள் வைத்த
தலைகவிழ்ந்து நிற்கின்றார்
பிள்ளைவாழ்கள் சொல்கேட்டு
பிள்ளை விழையாடிய பிள்ளை விழையாட்டு
சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது
பழமொழி சரியென பழையகமங்களுக்கு தெரிந்தபோது
சூனியக்காரனின் மண்டையோட்டுக்குள்
எங்கள் ஆத்மா அடைக்கப்பட்டுவிட்டது
மழை நீரை பிடித்து பனையில் ஏறும்
பனையேறி மீனைப்போல்
ஒரு கணம் கடும் சினத்தைப் பிடித்து
நியாயத்தின் மீதேறி சன்னதமாடத் துடிக்கும்
அடிமையின் கனவு கலைந்து போகும் தருணங்களில்
எங்கள் வாழ்வு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வினைகள் செத்துப்போய்
வெற்றுடலாய் கிடக்கும்போது
வினைக்கு மறுவினை பிறந்தால்
நாம் வாழ்ந்ததாக கடந்துசெல்லும்
ஒவ்வொரு கரிநாளும் எமக்குத் திருநாளே
தடங்கள்
சண்டமாருதன்
Saturday, February 18, 2012
Tuesday, June 8, 2010
தமிழ் கட்டும் கோவணம்




எஞ்சியது வெறுமை மட்டும்
அதை எனது தொடர்புக் கருவியான
தமிழில் எழுதுகின்றேன்
இந்தக் கருவி மட்டும்
கர்வத்துடன் இருக்கின்றது
எனது உணர்ச்சிகளுக்கும்
இந்தக் கருவிக்கும்
தொடர்பில்லாமல் போய்விட்டது
நான் அம்மணமாக நிற்கின்றபோதும்
நான் பேசும் மொழி கோவணத்துடன் நிற்கின்றது
பணமும் அதிகாரமும் உள்ளவர்கள்
எனது கோவணத்தை உருவி
நான் பேசும் மொழிக்கு கட்டுகின்றார்கள்
அதைப் பார்த்து
எம்மை கைகொட்டி ஆரவாரம்
செய்ய வற்புறுத்துகின்றார்கள்
ஆனால் எனது பிறப்புறுப்பை
எனது இருகைகளால் பொத்தவேண்டியிருக்கின்றது
என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்
நான் எப்ப சிரித்தேன் என்று நினைவில்லை
அழுகைகள் தான் என்னுடன் கூட வருகின்றது
நான் தமிழில் அழவில்லை
ஆங்கிலம் பிரஞ்சு யேர்மன் எந்த மொழியிலும் அழவில்லை
அதற்கு மொழி இல்லை
கோவணத்துடன் நிற்கும் இந்த மொழியால் அதை புரிந்துகொள்ள முடியாது
எமது காதில் கேட்ட வெடிச்சத்தங்களும் மொழிக்குள் அடங்காது
எமது காதில் கேட்ட கதறல்களும் ஒப்பாரிகளும் மொழியற்றவை
அதற்கு எந்த கெளரவமும் தேவை இல்லை
ஏனெனில் அவை என்னுடன் நிர்வாணமாய் இருக்கின்றது
அழுவதற்கு எந்த மொழியும் தேவையில்லை
Sunday, August 3, 2008
காட்சிப் பிரிவுகளின் கனவுப் பிரிவுகள்
அழகான குளத்தில்
அலையில்லாத
நீரின் நெளிவுகள்
ஆற்றின் ஓரத்தில்
வழைந்து படபடக்கும்
நாணல்கள்
காலைகளில்
வயல் வெளிகளில்
பயின் நுனியில்
இருந்து யோசிக்கும்
பனித்துளிகள்
தேனிக்கள் முட்டும்போது
ஆடும் பூக்கள்
தென்னோலைகளில்
ஊஞ்சல் ஆடும்
தூக்கணாங் குருவிக் கூடுகள்
நேராக வர
புடலங்காயில்
தொங்க விட்ட கற்கள்
பச்சைக் கொடியில்
மஞ்சளாய் ஒழிந்து பழுத்த
பாகற் பழங்கள்
வேலிக்குள் நுளையாமல்
கழுத்து மட்டை அடித்த
வெள்ளாடுகள்
தூரத்துப் பனையில்
கள் முட்டியோடு ஏறும்
சீவல் காரன்
முழு நிலவு பின்னிரவில்
பொன்னிறம் மிளிரும்
தரவைக் கடலில்
றால் பிடிக்கும் படகுகள்
வயல் நடுவில்
திடீர் என்று வளர்ந்த
மஞ்சள் குன்று நெற் சூடுகள்
இலைகளுள் மறைந்தாடும்
கிளி கொத்திய மாம்மழத்தின்
மஞ்சள்
இரவுகளில் தொப்பென்று விழும்
பனம் பழத்தின் சத்தங்கள்
கால்வாயில்
மிதந்து வரும்
குறுனிப் பூக்கள்
அலாரத்தின் விழிப்பில்
கலைந்து போன
உலத்தல் கனவு
வேலை நோக்கி
விரைகின்றது கால்கள்
ஒரு கறுத்த முகத்தை
சுற்று முற்றும் பார்த்து
தோற்றபடி
சன்னலுக்கு வெளியே
வேகமாக ஓடுகிறது
விளம்பரப் பலகைகள்
பயணம் தொடர்கிறது...
அலையில்லாத
நீரின் நெளிவுகள்
ஆற்றின் ஓரத்தில்
வழைந்து படபடக்கும்
நாணல்கள்
காலைகளில்
வயல் வெளிகளில்
பயின் நுனியில்
இருந்து யோசிக்கும்
பனித்துளிகள்
தேனிக்கள் முட்டும்போது
ஆடும் பூக்கள்
தென்னோலைகளில்
ஊஞ்சல் ஆடும்
தூக்கணாங் குருவிக் கூடுகள்
நேராக வர
புடலங்காயில்
தொங்க விட்ட கற்கள்
பச்சைக் கொடியில்
மஞ்சளாய் ஒழிந்து பழுத்த
பாகற் பழங்கள்
வேலிக்குள் நுளையாமல்
கழுத்து மட்டை அடித்த
வெள்ளாடுகள்
தூரத்துப் பனையில்
கள் முட்டியோடு ஏறும்
சீவல் காரன்
முழு நிலவு பின்னிரவில்
பொன்னிறம் மிளிரும்
தரவைக் கடலில்
றால் பிடிக்கும் படகுகள்
வயல் நடுவில்
திடீர் என்று வளர்ந்த
மஞ்சள் குன்று நெற் சூடுகள்
இலைகளுள் மறைந்தாடும்
கிளி கொத்திய மாம்மழத்தின்
மஞ்சள்
இரவுகளில் தொப்பென்று விழும்
பனம் பழத்தின் சத்தங்கள்
கால்வாயில்
மிதந்து வரும்
குறுனிப் பூக்கள்
அலாரத்தின் விழிப்பில்
கலைந்து போன
உலத்தல் கனவு
வேலை நோக்கி
விரைகின்றது கால்கள்
ஒரு கறுத்த முகத்தை
சுற்று முற்றும் பார்த்து
தோற்றபடி
சன்னலுக்கு வெளியே
வேகமாக ஓடுகிறது
விளம்பரப் பலகைகள்
பயணம் தொடர்கிறது...
Thursday, July 10, 2008
அன்றய பொழுதுகளின் விசாரணை
நெருஞ்சி முட்செடிகள்
மஞ்சாளாய் பூத்துக் குலுங்கியது
ரசிப்பது இயல்பில்லை
செருப்பில்லாத கால்கள்
முட்களையே நினைவுபடுத்தின
மாடப்புறாக்கள்
கூட்டமாக வரும்
வடிவுதான்
இருந்தும் பிடிக்காது
விதைத்த நெல்லை
தின்றழித்துவிடும் கோபம்
நின்று நினைவை உறுத்தும்
தொல்லை இல்லாத
கொக்குகள் பிடிக்கும்
பொழுதுசாயும் நேரம் கூடு திரும்பும்
நாம் வீடு திரும்பும் போது
கூட்டமாக கூடு திரும்பும்
புளு பூச்சிகளிலும்
நிறைய பிடிக்கும்
நிறைய பிடிக்காது
விலங்குகளிலும்
நிறைய பிடிக்கும்
நிறைய பிடிக்காது
பசுவையும் எருதுகளையும்
எப்போதும் பிடிக்கும்
இருந்தும்
இறுதியில் அடிமாடுதானே
சந்தையில் ஒரு நாள்
சிவப்பாக தொங்கும்
விருப்பு வெறுப்புகளுக்கு
நிச்சயம் ஏதேதோ காரணங்கள்
செயலுக்கும் ஏராளமான
காரணங்கள் நியாயங்கள்
காரணமில்லாத பொழுதுகள்
கனவில்லாத நித்திரைகள்
நேற்றும் நாளையும் இல்லா
இன்றய நாட்கள் எதுவும் இல்லை
அப்படி எதுவும் தேவையும் இல்லை?
தேம்பும் போதும்
சிரிக்கும் போதும்
சிலநேரம் கலவியின் உச்சத்தில்
முக்கி முனகும் போதும்
மொழி இழந்த சத்தங்கள்
கவனிக்கப்படுவதில்லை
காரணங்கள் வலுவாக இல்லை
அவளை பார்க்கும் போது
அடிவயிற்றில் இருந்து தொண்டை வரை
ஏதெதோ பிரண்டு உருளுது என்றான்
பின் வாயு மாத்திரை வாங்கி
இரண்டு வேளை சாப்பிட்டான்
காரணங்கள் வலுவாக இல்லை
உலகம் றொம்ப அர்த்தத்துடன்
வேகமாக சுற்ற தொடங்கி விட்டது?
வெளிப்படையான காரணங்கள்
புரிந்து கொள்ள கூடிய காரணங்கள்
இல்லாவிடில்
நேரமில்லை இந்த
சதைகளின் பரிதவிப்புகளுடன் மினைக்கெட
மஞ்சாளாய் பூத்துக் குலுங்கியது
ரசிப்பது இயல்பில்லை
செருப்பில்லாத கால்கள்
முட்களையே நினைவுபடுத்தின
மாடப்புறாக்கள்
கூட்டமாக வரும்
வடிவுதான்
இருந்தும் பிடிக்காது
விதைத்த நெல்லை
தின்றழித்துவிடும் கோபம்
நின்று நினைவை உறுத்தும்
தொல்லை இல்லாத
கொக்குகள் பிடிக்கும்
பொழுதுசாயும் நேரம் கூடு திரும்பும்
நாம் வீடு திரும்பும் போது
கூட்டமாக கூடு திரும்பும்
புளு பூச்சிகளிலும்
நிறைய பிடிக்கும்
நிறைய பிடிக்காது
விலங்குகளிலும்
நிறைய பிடிக்கும்
நிறைய பிடிக்காது
பசுவையும் எருதுகளையும்
எப்போதும் பிடிக்கும்
இருந்தும்
இறுதியில் அடிமாடுதானே
சந்தையில் ஒரு நாள்
சிவப்பாக தொங்கும்
விருப்பு வெறுப்புகளுக்கு
நிச்சயம் ஏதேதோ காரணங்கள்
செயலுக்கும் ஏராளமான
காரணங்கள் நியாயங்கள்
காரணமில்லாத பொழுதுகள்
கனவில்லாத நித்திரைகள்
நேற்றும் நாளையும் இல்லா
இன்றய நாட்கள் எதுவும் இல்லை
அப்படி எதுவும் தேவையும் இல்லை?
தேம்பும் போதும்
சிரிக்கும் போதும்
சிலநேரம் கலவியின் உச்சத்தில்
முக்கி முனகும் போதும்
மொழி இழந்த சத்தங்கள்
கவனிக்கப்படுவதில்லை
காரணங்கள் வலுவாக இல்லை
அவளை பார்க்கும் போது
அடிவயிற்றில் இருந்து தொண்டை வரை
ஏதெதோ பிரண்டு உருளுது என்றான்
பின் வாயு மாத்திரை வாங்கி
இரண்டு வேளை சாப்பிட்டான்
காரணங்கள் வலுவாக இல்லை
உலகம் றொம்ப அர்த்தத்துடன்
வேகமாக சுற்ற தொடங்கி விட்டது?
வெளிப்படையான காரணங்கள்
புரிந்து கொள்ள கூடிய காரணங்கள்
இல்லாவிடில்
நேரமில்லை இந்த
சதைகளின் பரிதவிப்புகளுடன் மினைக்கெட
Friday, April 18, 2008
இழப்பின் முடிவு
சில இரவுகளின் கனதி
சில துளி கண்ணீராக
குறைந்து போகும்
சேமிக்க வேண்டிய துளிகளும்
கணாமல் போய் விடுகின்றது
பாரமில்லாத இரவுகளில்
எதுவும் பூர்த்தியாவதில்லை
இழந்தவைகளை விட
கனதியில்லா இரவுகள்
பெறுமதியாக இல்லை
வழிகாட்டிய தாய்
இடையில் இறந்தும்
நீண்ட தூரம் நடந்துவிட்டேன்
யார் காட்டிய பாதை என்பதறியாமல்
இழப்பை அழுது மறக்கின்றேன்
நான் முட்டு சந்தில் நிற்பதை
நானே மறந்து நிற்கின்றேன்
ஏனெனில்
கனதியான இரவுகளை
லேசாக்க தெரிந்தவன்
அழுகை எனது
சுயநலம் என்பதை
அறிய நீண்டநாள் ஆகிவிட்டது
திரும்பி நடப்பதை தவிர
வேறு வளியில்லை என்று
திரும்பி பார்க்கின்றேன்
வந்த பாதையையும் காணவில்லை
அருகில் நின்ற
என் பிள்ளைகள் எங்கே
சுற்றிப்பார்க்கின்றேன்
திசைக்கொன்றாக
ஓடத்தொடங்கிவிட்டார்கள்
திரும்பி இவ்விடம் வருவார்களா
காத்திருக்கலாமா
இல்லை
எனக்கு வந்த திசை நினைவிருக்கு
அவர்களுக்கு இப்போது
போகும் திசை தெரியாது
எனவே
வர முடியாது
இழந்ததையும்
இப்போது தொலைத்ததையும்
நினைத்திருந்தால்
எஞ்சி நிற்கும் உயிருக்கு
கொஞ்சம் பெறுமதி
அதையும் அழுது
தொலைக்கின்றேன்
என்னை அடயாளப்படுத்த
என்னவார்த்தை?
சில துளி கண்ணீராக
குறைந்து போகும்
சேமிக்க வேண்டிய துளிகளும்
கணாமல் போய் விடுகின்றது
பாரமில்லாத இரவுகளில்
எதுவும் பூர்த்தியாவதில்லை
இழந்தவைகளை விட
கனதியில்லா இரவுகள்
பெறுமதியாக இல்லை
வழிகாட்டிய தாய்
இடையில் இறந்தும்
நீண்ட தூரம் நடந்துவிட்டேன்
யார் காட்டிய பாதை என்பதறியாமல்
இழப்பை அழுது மறக்கின்றேன்
நான் முட்டு சந்தில் நிற்பதை
நானே மறந்து நிற்கின்றேன்
ஏனெனில்
கனதியான இரவுகளை
லேசாக்க தெரிந்தவன்
அழுகை எனது
சுயநலம் என்பதை
அறிய நீண்டநாள் ஆகிவிட்டது
திரும்பி நடப்பதை தவிர
வேறு வளியில்லை என்று
திரும்பி பார்க்கின்றேன்
வந்த பாதையையும் காணவில்லை
அருகில் நின்ற
என் பிள்ளைகள் எங்கே
சுற்றிப்பார்க்கின்றேன்
திசைக்கொன்றாக
ஓடத்தொடங்கிவிட்டார்கள்
திரும்பி இவ்விடம் வருவார்களா
காத்திருக்கலாமா
இல்லை
எனக்கு வந்த திசை நினைவிருக்கு
அவர்களுக்கு இப்போது
போகும் திசை தெரியாது
எனவே
வர முடியாது
இழந்ததையும்
இப்போது தொலைத்ததையும்
நினைத்திருந்தால்
எஞ்சி நிற்கும் உயிருக்கு
கொஞ்சம் பெறுமதி
அதையும் அழுது
தொலைக்கின்றேன்
என்னை அடயாளப்படுத்த
என்னவார்த்தை?
Friday, February 29, 2008
கடவுள்

உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பே ஆலையம்
வள்ளல் பிரானுக்கு
வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு
சீவன் சிவலிங்கம்
திருமூலர் சொன்னது
உயிர் தான் கடவுள்
இந்த ஜீவன்களுக்குள்ளும்
கடவுள் இன்னும் இறக்கவில்லை
கடவுள் இங்கே
இதை விடுத்து
எங்கே தேடுகின்றாய் மானுடனே?
கண்ணுக்கு முன்னால்
கடவுள்
காணிக்கையை அவரிடம்
நேரடியாய் கொடுத்துவிடு
ஆலயங்கள் இடிகின்றது
சீவன் சாகிறது
கடவுளிடம் இருந்து
விலகாதே மானுடனே
கருங்கல்லை கடவுள் என்று
வைக்கலில் ஊறிய பசும்பாலை
கல்லின் மேல் உற்றி
கருணையற்றவன் ஆகாதே
உயிருள்ள கடவுளின்
வாய்கள் வறண்டு கிடக்கின்றது.
மலைபோல் தேங்காய்களை
சபரிமலையில்
விரையமாக்கதே
கடவுளிடம் நேரடியாய் கொடுத்துவிடு
பட்டுப்பூச்சிகளை கொன்று
பட்டு நெய்து
பட்டாபிசேகம் என்னும்
பாபத்தை செய்யாதே
அந்த பணத்தை
பசியோடு இருக்கும் கடவுளுக்கு
பாசமாய் கொடுத்து விடு
நேசமாய் கடவுளுடன்
கூடியிரு
உனக்குள் இருக்கும்
உயிர்தான் கடவுள் என்று
உணர்ந்து விடு
கடவுள்களுடன்
கைகோர்த்துவிடு
கடவுள் என்று சொன்னார்
கடந்து உன்னுள் சென்றுவிடு.
-சின்னா
மழை நினைவுகள்
விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத
காரிருள்
மின்சாரமில்லாததெருக்களில்
ஈசல்கள் ஊர்வலம்
முகத்திலடிக்கும் வண்டுகள்
கண்ணுக்கள் சென்றுவிட்டால்
கண்ணீருடன் வெளிவரும்
கசக்கி விட்டால்
மிச்சமும் சூனியம்
மல்லுக்கட்டும்
மாரித்தவளைகளின்
சத்தம் ஒரு சங்கீதம்
வெட்டும் மின்னல்
விடலைப்பயிர்களை
புகைப்படம் எடுக்கும்
தூறல்கள் சாரல்கள்
எங்கும் நனையும் உடம்பில்
தலைமட்டும்
உரப்பையின் முக்கோணத்துள்
தப்பிவிடும்
மக்காட்டில்லாத சைக்கிள்
சேறை வாரி
முதுகிலடிக்கும்
தூறல்கள் கழுவி விடும்
பற்கள் குளிரில் கிடுகிடுக்கும்
கண்ணாடிப்பையில்
சுத்தி வைத்த வீடி
சொர்கத்தை நினைவு படுத்தும்
நெருப்பு பெட்டியை
கமக்கட்டுள் வைத்து
சூடேற்றி பற்றவைத்து
சடுதியில் ஒரு சாதனை
வீட்டின் மூலையில்
புகையும் நெருப்புச்சட்டியில்
குளிர்ந்த கைகளை
சூடேற்றுவது சுகம்
கிடுகு கசிந்து
ஒழுகும் இடத்திலெல்லாம்
கிண்ணம்
கிண்ணத்தில் விழும்
ஒழுக் கின் ஓசையின்
இதமான தாலாட்டில்
அணில்கோடன் சாக்குள்
ஆசுவாசமாக காலை விட்டு
சற்று நேரத்தில் குறட்டை விட்டு
நிம்மதியான நித்திரை
கருக்கலில் எழும்பி
மீண்டும் நடையை கட்ட
விரட்டும் வெயில்
வேர்வை தெறிக்க
இரவின் குளிர்
வேண்டும் எனும்
மீண்டும் மனம் -சின்னா
காரிருள்
மின்சாரமில்லாததெருக்களில்
ஈசல்கள் ஊர்வலம்
முகத்திலடிக்கும் வண்டுகள்
கண்ணுக்கள் சென்றுவிட்டால்
கண்ணீருடன் வெளிவரும்
கசக்கி விட்டால்
மிச்சமும் சூனியம்
மல்லுக்கட்டும்
மாரித்தவளைகளின்
சத்தம் ஒரு சங்கீதம்
வெட்டும் மின்னல்
விடலைப்பயிர்களை
புகைப்படம் எடுக்கும்
தூறல்கள் சாரல்கள்
எங்கும் நனையும் உடம்பில்
தலைமட்டும்
உரப்பையின் முக்கோணத்துள்
தப்பிவிடும்
மக்காட்டில்லாத சைக்கிள்
சேறை வாரி
முதுகிலடிக்கும்
தூறல்கள் கழுவி விடும்
பற்கள் குளிரில் கிடுகிடுக்கும்
கண்ணாடிப்பையில்
சுத்தி வைத்த வீடி
சொர்கத்தை நினைவு படுத்தும்
நெருப்பு பெட்டியை
கமக்கட்டுள் வைத்து
சூடேற்றி பற்றவைத்து
சடுதியில் ஒரு சாதனை
வீட்டின் மூலையில்
புகையும் நெருப்புச்சட்டியில்
குளிர்ந்த கைகளை
சூடேற்றுவது சுகம்
கிடுகு கசிந்து
ஒழுகும் இடத்திலெல்லாம்
கிண்ணம்
கிண்ணத்தில் விழும்
ஒழுக் கின் ஓசையின்
இதமான தாலாட்டில்
அணில்கோடன் சாக்குள்
ஆசுவாசமாக காலை விட்டு
சற்று நேரத்தில் குறட்டை விட்டு
நிம்மதியான நித்திரை
கருக்கலில் எழும்பி
மீண்டும் நடையை கட்ட
விரட்டும் வெயில்
வேர்வை தெறிக்க
இரவின் குளிர்
வேண்டும் எனும்
மீண்டும் மனம் -சின்னா
Subscribe to:
Comments (Atom)
எம்பெருமான்
உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...
-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலையம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் திருமூலர் சொன்னது உயிர் தான் கட...
-
எஞ்சியது வெறுமை மட்டும் அதை எனது தொடர்புக் கருவியான தமிழில் எழுதுகின்றேன் இந்தக் கருவி மட்டும் கர்வத்துடன் இருக்கின்றது எனது உணர்ச்சிகளுக்க...
-
விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத காரிருள் மின்சாரமில்லாததெருக்களில் ஈசல்கள் ஊர்வலம் முகத்திலடிக்கும் வண்டுகள் கண்ணுக்கள் சென்றுவிட்டால் கண்ணீரு...