Friday, February 29, 2008

மழை நினைவுகள்

விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத
காரிருள்
மின்சாரமில்லாததெருக்களில்
ஈசல்கள் ஊர்வலம்

முகத்திலடிக்கும் வண்டுகள்
கண்ணுக்கள் சென்றுவிட்டால்
கண்ணீருடன் வெளிவரும்
கசக்கி விட்டால்
மிச்சமும் சூனியம்

மல்லுக்கட்டும்
மாரித்தவளைகளின்
சத்தம் ஒரு சங்கீதம்

வெட்டும் மின்னல்
விடலைப்பயிர்களை
புகைப்படம் எடுக்கும்

தூறல்கள் சாரல்கள்
எங்கும் நனையும் உடம்பில்
தலைமட்டும்
உரப்பையின் முக்கோணத்துள்
தப்பிவிடும்

மக்காட்டில்லாத சைக்கிள்
சேறை வாரி
முதுகிலடிக்கும்
தூறல்கள் கழுவி விடும்

பற்கள் குளிரில் கிடுகிடுக்கும்
கண்ணாடிப்பையில்
சுத்தி வைத்த வீடி
சொர்கத்தை நினைவு படுத்தும்

நெருப்பு பெட்டியை
கமக்கட்டுள் வைத்து
சூடேற்றி பற்றவைத்து
சடுதியில் ஒரு சாதனை

வீட்டின் மூலையில்
புகையும் நெருப்புச்சட்டியில்
குளிர்ந்த கைகளை
சூடேற்றுவது சுகம்

கிடுகு கசிந்து
ஒழுகும் இடத்திலெல்லாம்
கிண்ணம்

கிண்ணத்தில் விழும்
ஒழுக் கின் ஓசையின்
இதமான தாலாட்டில்
அணில்கோடன் சாக்குள்
ஆசுவாசமாக காலை விட்டு
சற்று நேரத்தில் குறட்டை விட்டு
நிம்மதியான நித்திரை

கருக்கலில் எழும்பி
மீண்டும் நடையை கட்ட
விரட்டும் வெயில்
வேர்வை தெறிக்க
இரவின் குளிர்
வேண்டும் எனும்
மீண்டும் மனம்
-சின்னா

No comments:

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...