சில இரவுகளின் கனதி
சில துளி கண்ணீராக
குறைந்து போகும்
சேமிக்க வேண்டிய துளிகளும்
கணாமல் போய் விடுகின்றது
பாரமில்லாத இரவுகளில்
எதுவும் பூர்த்தியாவதில்லை
இழந்தவைகளை விட
கனதியில்லா இரவுகள்
பெறுமதியாக இல்லை
வழிகாட்டிய தாய்
இடையில் இறந்தும்
நீண்ட தூரம் நடந்துவிட்டேன்
யார் காட்டிய பாதை என்பதறியாமல்
இழப்பை அழுது மறக்கின்றேன்
நான் முட்டு சந்தில் நிற்பதை
நானே மறந்து நிற்கின்றேன்
ஏனெனில்
கனதியான இரவுகளை
லேசாக்க தெரிந்தவன்
அழுகை எனது
சுயநலம் என்பதை
அறிய நீண்டநாள் ஆகிவிட்டது
திரும்பி நடப்பதை தவிர
வேறு வளியில்லை என்று
திரும்பி பார்க்கின்றேன்
வந்த பாதையையும் காணவில்லை
அருகில் நின்ற
என் பிள்ளைகள் எங்கே
சுற்றிப்பார்க்கின்றேன்
திசைக்கொன்றாக
ஓடத்தொடங்கிவிட்டார்கள்
திரும்பி இவ்விடம் வருவார்களா
காத்திருக்கலாமா
இல்லை
எனக்கு வந்த திசை நினைவிருக்கு
அவர்களுக்கு இப்போது
போகும் திசை தெரியாது
எனவே
வர முடியாது
இழந்ததையும்
இப்போது தொலைத்ததையும்
நினைத்திருந்தால்
எஞ்சி நிற்கும் உயிருக்கு
கொஞ்சம் பெறுமதி
அதையும் அழுது
தொலைக்கின்றேன்
என்னை அடயாளப்படுத்த
என்னவார்த்தை?
Subscribe to:
Post Comments (Atom)
எம்பெருமான்
உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...
-
எஞ்சியது வெறுமை மட்டும் அதை எனது தொடர்புக் கருவியான தமிழில் எழுதுகின்றேன் இந்தக் கருவி மட்டும் கர்வத்துடன் இருக்கின்றது எனது உணர்ச்சிகளுக்க...
-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலையம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் திருமூலர் சொன்னது உயிர் தான் கட...
-
அழகான குளத்தில் அலையில்லாத நீரின் நெளிவுகள் ஆற்றின் ஓரத்தில் வழைந்து படபடக்கும் நாணல்கள் காலைகளில் வயல் வெளிகளில் பயின் நுனியில் இருந்து யோ...
No comments:
Post a Comment