Friday, April 18, 2008

இழப்பின் முடிவு

சில இரவுகளின் கனதி


சில துளி கண்ணீராக


குறைந்து போகும்


சேமிக்க வேண்டிய துளிகளும்


கணாமல் போய் விடுகின்றது



பாரமில்லாத இரவுகளில்


எதுவும் பூர்த்தியாவதில்லை


இழந்தவைகளை விட


கனதியில்லா இரவுகள்


பெறுமதியாக இல்லை





வழிகாட்டிய தாய்


இடையில் இறந்தும்


நீண்ட தூரம் நடந்துவிட்டேன்


யார் காட்டிய பாதை என்பதறியாமல்





இழப்பை அழுது மறக்கின்றேன்


நான் முட்டு சந்தில் நிற்பதை


நானே மறந்து நிற்கின்றேன்


ஏனெனில்


கனதியான இரவுகளை


லேசாக்க தெரிந்தவன்


அழுகை எனது


சுயநலம் என்பதை


அறிய நீண்டநாள் ஆகிவிட்டது





திரும்பி நடப்பதை தவிர


வேறு வளியில்லை என்று


திரும்பி பார்க்கின்றேன்


வந்த பாதையையும் காணவில்லை





அருகில் நின்ற


என் பிள்ளைகள் எங்கே


சுற்றிப்பார்க்கின்றேன்


திசைக்கொன்றாக


ஓடத்தொடங்கிவிட்டார்கள்





திரும்பி இவ்விடம் வருவார்களா


காத்திருக்கலாமா


இல்லை


எனக்கு வந்த திசை நினைவிருக்கு


அவர்களுக்கு இப்போது


போகும் திசை தெரியாது


எனவே


வர முடியாது




இழந்ததையும்


இப்போது தொலைத்ததையும்


நினைத்திருந்தால்


எஞ்சி நிற்கும் உயிருக்கு


கொஞ்சம் பெறுமதி


அதையும் அழுது


தொலைக்கின்றேன்


என்னை அடயாளப்படுத்த


என்னவார்த்தை?

No comments:

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...