Sunday, August 3, 2008

காட்சிப் பிரிவுகளின் கனவுப் பிரிவுகள்

அழகான குளத்தில்
அலையில்லாத
நீரின் நெளிவுகள்

ஆற்றின் ஓரத்தில்
வழைந்து படபடக்கும்
நாணல்கள்

காலைகளில்
வயல் வெளிகளில்
பயின் நுனியில்
இருந்து யோசிக்கும்
பனித்துளிகள்

தேனிக்கள் முட்டும்போது
ஆடும் பூக்கள்

தென்னோலைகளில்
ஊஞ்சல் ஆடும்
தூக்கணாங் குருவிக் கூடுகள்

நேராக வர
புடலங்காயில்
தொங்க விட்ட கற்கள்

பச்சைக் கொடியில்
மஞ்சளாய் ஒழிந்து பழுத்த
பாகற் பழங்கள்

வேலிக்குள் நுளையாமல்
கழுத்து மட்டை அடித்த
வெள்ளாடுகள்

தூரத்துப் பனையில்
கள் முட்டியோடு ஏறும்
சீவல் காரன்

முழு நிலவு பின்னிரவில்
பொன்னிறம் மிளிரும்
தரவைக் கடலில்
றால் பிடிக்கும் படகுகள்

வயல் நடுவில்
திடீர் என்று வளர்ந்த
மஞ்சள் குன்று நெற் சூடுகள்

இலைகளுள் மறைந்தாடும்
கிளி கொத்திய மாம்மழத்தின்
மஞ்சள்

இரவுகளில் தொப்பென்று விழும்
பனம் பழத்தின் சத்தங்கள்

கால்வாயில்
மிதந்து வரும்
குறுனிப் பூக்கள்

அலாரத்தின் விழிப்பில்
கலைந்து போன
உலத்தல் கனவு

வேலை நோக்கி
விரைகின்றது கால்கள்
ஒரு கறுத்த முகத்தை
சுற்று முற்றும் பார்த்து
தோற்றபடி

சன்னலுக்கு வெளியே
வேகமாக ஓடுகிறது
விளம்பரப் பலகைகள்
பயணம் தொடர்கிறது...

10 comments:

தமிழன்-கறுப்பி... said...

கனவில் எழுதிய வரிகள் எல்லாம் பிரிந்து விட்ட தேசத்தின் பொக்கிஷங்கள்...

கோவை விஜய் said...

//வேலை நோக்கி
விரைகின்றது கால்கள்
ஒரு கறுத்த முகத்தை
சுற்று முற்றும் பார்த்து
தோற்றபடி

சன்னலுக்கு வெளியே
வேகமாக ஓடுகிறது
விளம்பரப் பலகைகள்
பயணம் தொடர்கிறது...//


அருமை

பாரட்டுக்கள்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

அருமை

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

sukan said...

தமிழன் கோவை விஜய் மற்றும் கடையம் ஆனந்த் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

தமிழ்நதி said...

உங்கள் பின்னூட்டத்தின் வழி தொடர்ந்து வந்தேன். சுற்றுப்புறத்தைப் பற்றிய நுண்ணிய பார்வை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. பழைய ஞாபகங்களைக் கிளர்த்திய வரிகள்.

ரௌத்ரன் said...

//முழு நிலவு பின்னிரவில்
பொன்னிறம் மிளிரும்
தரவைக் கடலில்
றால் பிடிக்கும் படகுகள்

கால்வாயில்
மிதந்து வரும்
குறுனிப் பூக்கள்//

அழகான காட்சி படுத்தல்கள்...வாழ்த்துக்கள் தோழி...

ஜமாலன் said...

இக்கவிதை கனவைப்பற்றியது அல்ல. நிலம் ஆழ்மனதில் வரையப்பட்டுள்ளதின் ஒரு வெளிப்பாடுதான். தற்சமயம் ஈழம் என்பது இப்படியாக கவிதைகளிலும் மொழியிலும் வரையப்பட்ட நிலப்பரப்பாகிக் கொண்டுள்ளது. ஒரு கற்பிதப்புவியலாக உள்ளது. உங்கள் கவிதைகள் அந்த புவியிலின் நினைவுகளை நுட்பமாக முன்வைக்கின்றன. சேரன் செல்வி போன்ற கவிஞர்களின் கவிதைகளில் வரும் ஈழத்தின் இயற்கை இக்கவிதைகளில் நினைவுட்டப் பட்டள்ளது. அருமை.

sukan said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் உறவுகளே

தீபிகா(Theepika) said...

ஒவ்வொரு காட்சிகளையும் விடாமல் விழுங்கி வைத்திருக்கிற விழிகள் எல்லாம சேர்த்து உருட்டித் தந்திருக்கிற கவிதை இது. இறுதியில் எல்லாம் பிரிந்த சோகத்தன் வலியில் பணம் தேடியலையும் நகரத்துப் பயணம் அழகற்றதாகவே இருக்கிறது. பயிரில் என்கிற சொல்லில் ரி தவறவிடப்பட்டிருக்கிறது. சரி செய்க.

தீபிகா.

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...